சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. இதற்கிடையில் 4வது கட்ட ஊரடங்கும் வரும் 31ந்தேதி நிறைவடைகிறது. இதனால், கொரோனா மேலும் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், நாளை மருத்துவ நிபுணர்களுடன் நாளை மீண்டும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே  கடந்த மே 25 ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்திருந்த நிலையில், நாளை மீண்டும் ஆலோசனை நடத்துவதால்,   மருத்துவ குழு பரிந்துரையின்படி தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.