டெல்லி: லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும், இ பாஸ் கட்டாயமில்லை, ஓட்டல்கள், மால்களை வரும் 8ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் உள்ளது. 4 முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளையும் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் 5வது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: திரையரங்குகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கல்வி நிறுவனங்களை திறப்பது பற்றி ஜூலையில் முடிவெடுக்கலாம். நாடு முழுவதும் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.
ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க அனுமதி அளிக்கப்படும். கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும்.
கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது.
அதன் எல்லைகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்களே முடிவு செய்து செய்யலாம். மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை, மாநிலத்திற்குள் பயணிக்க இ பாஸ் கட்டாயம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.