சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேலும் 2 வாரம் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து,  தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும், ஆரஞ்ச மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை பச்சை மண்டலமாக இருந்து வந்த கிருஷ்ணகிரி தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது. அதுபோல அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாகி மாறி உள்ளது. இது தொடர்பாகவும் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.