சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (25ந்தேதி காலை 10 மணி தகவல்) 6,64,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள தொகை  ரூ.15 கோடியை தாண்டி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 5 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தடை உத்தரவை மீறி வெளியே செல்வோரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை காவல்துறை வெளியிட்டுள் ளதகவலின்படி, தமிழகத்தில்,  144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 6 லட்சத்து 64 ஆயிரத்து 944 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

7 லட்சத்து 23 ஆயிரத்து 920 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

5 லட்சத்து 35 ஆயிரத்து 640 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

 இதுவரை சுமார் 15 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 685 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.