சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை  8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276  கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.

 

கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடநத மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 106 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 8 லட்சத்து 23 ஆயிரத்து 488 பேரை கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்ட உள்ளனர்.

இதுவரை  6 லட்சத்து 24 ஆயிரத்து 720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை அபராதமாக 17 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 276 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.