புதுடெல்லி:

லோக்பால்  அமைப்பின் அலுவலகம் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து செயல்பட உள்ளது.

தேசிய அளவில் அமைக்கப்படும் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் உள்பட மேலும் 4 பேர் லோக்பால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல் வழக்குகளை வழக்குகளை    விசாரிக்க  முதல்முறையாக லோக்பால் அமைப்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத.

டெல்லியில் உள்ள சாணக்கியாபுரி பகுதியில் அமைந்துள்ள  5 நட்சத்திர அசோகா ஓட்டலில் லோக்பால் அமைப்புக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல் வழக்குகளை வழக்குகளை    விசாரிக்க  முதல்முறையாக லோக்பால் அமைப்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.