புது டெல்லி:

லோக்பால் உறுப்பினரும் ஓய்வு பெற்ற் நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 62.

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான இவர் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அவரது மகள் மற்றும் சமையல்காரர் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமையான நீதிபதி திரிபாதி, எய்ம்ஸில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை அடுத்து அவரை வென்டிலேட்டரில் வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்தும், உடல் நிலை மோசமடைந்து இரவு 8:45 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.