டெல்லி: எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச் 8ம் தேதி தொடங்கியது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மக்களவை மார்ச் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார். இதே போன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவை நடவடிக்கைகள் தொடர முடியாத நிலையில் மாநிலங்களவையும் மார்ச் 15ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.