சென்னை: முதுகு வலி பிரச்சினையால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தாலும், உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு, அதீத கவனத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி.

அவர் கூறியதாவது, “முதுகில் இன்னும் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நிலைமை மோசமாகிவிடவில்லை. எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் முக்கியமானவை.

சில முக்கியத்துவமற்ற ஆட்டங்களில் விளையாடாத எந்தப் பெரிய விளையாட்டு வீரரும் கிடையாது. நிலைமை மோசமானால், நான் ஓய்வெடுக்க வேண்டிவரும். இந்த காலகட்டங்களில் சில சாதாரண ஆட்டங்களில் ஆட வேண்டும்.

ஏனெனில், நிலைமை முற்றிலும் சரியாகும் வரை காத்திருந்தால், அதிக இடைவெளி ஏற்பட்டுவிடும்” என்றார்.