சென்னை:

ண்பாட்டு மக்கள் தொடர்பகத்துக்கும் லயோலா கல்லூரிக்கும் தொடர்பு இல்லை என்று  லயோலா கல்லூரி மறுப்பு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற  லயோலா கல்லூரி  முன்னாள் மாணவர்கள் அமைப்பு கருத்து கணிப்பு வெளியிட்டது.

அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40  நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க தலைமை யிலான கூட்டணி 27 முதல் 33 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பண்பாட்டு மக்கள் தொடர்பகத்துக்கும் லயோலா கல்லூரிக்கும் தொடர்பு இல்லை என்று  லயோலா கல்லூரி மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.