லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.௦ .

2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது தான் 2.0.

இந்த இரண்டு படங்களுக்கும் சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் அவர்கள் இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்திரன் படத்திற்கே இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். எனக்கு பின்னால் ஒரு பெரிய டீம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நான் தரவேண்டும். பல முறை தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்காத காரணத்தால தான் நான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், முதல் முறையாக லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமதி ரேக்ஸ், ’2.0’ படத்துக்கான சப்டைட்டில் பணிக்கு இரண்டு லட்சம் கேட்டார். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவர் சொந்த விருப்பத்தில் இந்த வேலையைச் செய்து முடித்து, பணம் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொன்னார். பின்னர் அவர் தொடர்புகொண்டு சொன்ன கட்டணம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

ரேக்ஸின் இந்த குற்றச்சாட்டு எங்கள் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கத்துடன் சொல்லப்பட்டுள்ளது. அவர் இதை பொதுவில் கொண்டு வந்து விட்டதால் நாங்களும் ஒரு லட்சம் ரூபாய் தரத் தயாராக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார் .