மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று வெளியாகிவுள்ளது. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.

கொரோனா பயத்தை காற்றில் பறக்கவிட்டு அதிகாலையிலேயே படத்தை காண ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாயின.

திரைப்பிரலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் கர்ணனை பாராட்டி வருகின்றனர். முன்னாள் மேயரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான மா, சுப்பிரமணியன் ’கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

“பரியேறும் பெருமாளில் “பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்’ கரியேறும் கர்ணனில் ” இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார். தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார் வாழ்த்துகள். எனப் பதிவிட்டுள்ளார்.