வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதைப்படி, ஒவ்வொரு காட்சியிலும் அதிகப்படியான நடிகர்கள் உள்ளதால் இதன் படப்பிடிப்பு தாமதமானது.
மேலும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டிருந்தது .
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் “தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து, மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் கே.எல். எடிட் செய்யவுள்ளார். யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.