நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’படம் உருவாகியுள்ளது .
இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் மற்றும் மாதவன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறாராம். சூர்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் வருவதுபோல் இருந்தாலும் அவரது கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள்.

அதேபோல் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் ஷாருக் கான் நடிக்க உள்ளாராம் .

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மாதவன். சுமார் 400 விமானங்கள் அந்த தளத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.