போபால்:

த்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் ரயில் நிலையத்தில், நடைபாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

போபால் ரயில் நிலையத்தில் இன்றுகாலை மக்கள் வழக்கம்போல பரபரப்பாக தங்களது பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நடைபாதை ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிப்பாடு களுக்குள் பலர் சிக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடடினயாக அங்கிருந்த பொதுமக்களும், ரயில்வே தொழிலாளர்களும் அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது… இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.