போபால்:

த்திய பிரதேச ஆளுநராக லால்ஜி தண்டன் உள்ளார். அவரிடம் உள்துறை அமைச்சர்  அமித்ஷா போல் குரல் மாற்றம் செய்து போனில் பேசிய விமானப்படை கமாண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் லால்ஜி தண்டன் இருந்து வருகிறார்.

சமீபத்தில் லால்ஜிக்கு, உள்துறை அமித்ஷா பேசுவதாக போன் கால் வந்தது. அப்போது பேசியவர், சிலரின் பெயர்களை கூறி, அவர்களை ம.பி. மாநில பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமியுங்கள் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சந்தேகம் அடைந்த கவர்னர், இந்த போன் கால் குறித்து சிறப்பு படை காவல்துறையினரிடம் ரகசிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதில், கவர்னர் லால்ஜியிடம் பேசியது அமைச்சர் அமித்ஷா இல்லை என்பதும், விமானப்படையின் கமாண்டர் ஒருவர் என்பதும் தெரிய வ்நதது. இதையடுத்து, அந்த கமாண்டரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.