சென்னை:

லேசியாவில் ரஜினியின் தர்பார் படம் வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதன்படி, லைக்கா நிறுவனம், மலேசிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகைக்கான வங்கி உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே, அங்கு படத்தை திரையிடலாம்,  என்று கூறி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா  நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தர்பார்’. இந்த படம் வரும் 9ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தர்பார் படத்தை வெளியிட தடை கேட்டு மலேசியா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, லைகா நிறுவனம் ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லைக்கா நிறுவனம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், மலேசிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையை செலுத்தினால் மட்டுமே, தர்பார் படம் மலேசியாவில் வெளியிடலாம் என்று கூறியுள்ளது.

ரஜினிகாந்த் தர்பார் படம் வெளியிட தடையில்லை என்று கூறிய நீதிமன்றம், மலேசிய நிறுவனத்துக்கு லைகா நிறுவனம் ரூ. 4.9 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை அளித்தால் மட்டுமே  மலேசியாவில் படத்தை வெளியிடலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதன் காரணமாக தர்பார் படம் மலேசியாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.