சென்னை:

திருமண விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் இ.பி.எஸ்., குறித்து அவதூறாக பேசியதாக, அவர்  மீது செங்கல்பட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி  ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் அவதூறு வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

கடந்த  ஜனவரி மாதம் 20ந்தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு  நாளை  நேரில் ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், விசாரணைக்கும் தடை விதித்தது.