சென்னை:

பாலியல் புகாரில் சிக்கிய சென்னை மியூசிக் அகாடமி செயலாளர் பாப்பு  வேணுகோபால ராவ் தனது பதவியை ராஜினமா செய்தார்.

சென்னை மியூசிக் அகாடமி செயலாளராக இருந்தவர் பாப்பு வேணுகோபால ராவ். கடந்த மாதம் வக்கீலும், சமூக நல ஆர்வலருமான ராயா சர்க்கார் பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கல்வியாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில் பாப்பு வேணுகோபால ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் அகாடமியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை வேணுகோபால் வெளிப்படையாக மறுக்க வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த இரண்டுக்கும் வேணுகோபால் மறுப்பு தெரிவித்து வந்தார்.

தொடர் நிர்ப்பந்தம் காரணமாக அவர் செயலாளர் பதவியை வேணுகோபால ராவ் ராஜினாமா   செய்துவிட்டதாக அகாடமி தலைவர் முரளி தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவர்     ராஜினாமா செய்தாரா? என்ற கேள்விக்கு முரளி பதிலளிக்க மறுத்துவிட்டார்.