மதுரை:

மதுரையில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளின் ரூ.52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கிரானைட் நிறுவனங்களின் மீதான முறைகேடு புகாரின் பேரில் அமலாக்கத்துறை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன் மூலம் 2 கிரானைட் நிறுவனங்களுக்கு சொந்தமான 284 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.