மதுரை: எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வானது, கடந்த ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது. எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு தொடர்பான மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.