மதுரை மீனாட்சி அம்மன் தனிச்சிறப்புக்கள்
1.மீனாட்சி அம்மன் விக்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.
3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதைத் திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலைத் திரும்பத் திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4.அன்னையின் விக்ரகம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரகமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.  இவளின் இயற்பெயர் தடாதகை அங்கயற்கண்ணி ஆகும்.
5. பாண்டிய மகாராஜாவுக்கும் மகாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.
6. இங்கு கற்ப கிரகத்தில் அன்னையின் விக்ரகம் உயிர் உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.
7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.
8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாகத் தரப்படும்.
9.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
10.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.
11.அனைத்து சிவ ஆலயமும் முக்தியைத் தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.
12. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி
13. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.
14.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரைத் திருவிழா அன்னைக்கும் ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்
15. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாகக் கொண்டாடும் விழா.
16. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகு மலையான்.உலக அதிசயங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம்.
இவளைச் சரண் அடைந்தால் நம்மைக் காப்பாள் அன்னை மீனாட்சி.