‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

தற்போது பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.