இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது. அரசு கொள்ளை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு முறையிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட நீதிபதிகள், வருவாய் அதிகாரியை காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் உடனே, கைப்பற்றுமாறு ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர். காவல்நிலையத்தில் இருக்கும் தடயம், ஆதாரத்தை சேகரிப்பதில் கோவில்பட்டி ஜே.எம்.க்கு உதவ நிபுணர்களின் குழுவை அனுப்ப வேண்டும் என்று தடய அறிவியல் கூடுதல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
மேலும், விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் நியமித்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத்துழைப்பு தர மறுத்த போலீஸ் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஒத்துழைக்க போலீஸ் மறுப்பதா என எச்சரிக்கை விடுத்தனர்.
முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி வழங்கிய அறிக்கையில்,காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கோபடைந்த நீதிபதிகள், இது ஒரு மோசமான முன்னுதாரம் என்று கடுமையாக சாடியதுடன், மாவட்டஆட்சித்தலைவர், உடனடியாக சாத்தான்குளம் காவல்நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், உடனே வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தர வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும், காவலில் வைக்கப்பட்ட கைதிகள் கொலைகள் குறித்து மக்கள் மீது பெரும் கோபம் இருந்தபோதிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை இடமாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.