சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சம்பா மாவட்டத்தை மையமாக கொண்டு நண்பகல் 1.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நில நடுக்கத்தின் போது வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்தில் உறைந்து, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

எந்த உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.