பித்ரோராகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை 4.38 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் லேசாக குலுங்கின. பீதி அடைந்த பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து வெளியில் ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.