ந்தோனேசியாவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை 5.16 மணியளவில் இந்தோனேசியாவின் செராம் பகுதியில்  இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும்,  இதன் காரணமாக வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீதிக்கு ஓடினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை.