திருச்சி:

கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெணையுடன் 300 மீ. பருத்தி திரியில் மகா தீபம் மாலை 5.30 மணியளவில் ஏற்றப்படுகிறது. நாளை ஏற்றப்படும் மகாதீபம் 3 நாட்களுக்கு தொடர்ந்து எரியவுள்ளது.

இதையடுத்து, 273 அடி உயரம், 417 படிக்கட்டுகள் கொண்ட மலைக்கோட்டை கோயிலுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை. உள்ளே இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டு, உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு சிறப்பு பூஜை & மகா தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் மலைக்கோட்டை கோயிலில் நடைபெறும் முக்கியமான ஒரு நிகழ்வாக இது இருக்கிறது.