தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த ஸ்தலமாக ராமேஸ்வரம் கூறப்படுகிறது. அங்கு கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அக்னி தீர்த்தம் உள்பட அனைத்து தீர்த்தங்களில் நீராடுவது வழக்க மான நடைமுறை.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரை, ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்யவோ, குளிக்கவோ கூடாது என தமிழகஅரசு தடை விதித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கவோ, அக்னி தீர்த்தத்தில் நீராடவோ கூடாது என்று தடைக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, ஸ்ரீரங்கத்திலும் படித்துறையில் நிதி கொடுக்க தடை போடப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் ஆற்று படித்துறையில் தர்ப்பணம் செய்யவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டஉள்ளது.
மேலும், நெல்லை மாநகர பகுதி களில் குறுக்குத்துறை முருகன் கோவில், பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, திருப்புடை மருதூர் படித் துறை, முக்கூடல் ஆறு உள்பட நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பொதுமக்கள் நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடலுக்கு மக்கள் வருவதை தடுக்க போலீசார் மூலம் தீவிர கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது. வழக்கமாக புரட்டாசி மகாளய அமாவாசைக்கு கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பிரச் சினை காரணமாக அது தடைபட்டுள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு, விருத்தாசலம் மணிமுக்தாறு என்று மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் காவிரி, பவானி ஆற்றங்கரைகளில் உள்ள புனித- புண்ணியதலங்களில் பொதுமக்கள் கூடி திதி, தர்பண பூஜைகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்யவோ, குளிக்கவோ கூடாது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. மேலும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.