மும்பை: மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராய்காட் மாவட்டத்தில் உள்ள்ள மகாட் என்ற இடத்தில் உள்ள 5 மாடி கட்டிடத்தின் 3 தளங்கள் திடீரென இடிந்து விழுந்தன. அதன் இடிபாடுகளில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளனர். முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் நீடிக்கின்றன. நிகழ்விடத்திற்கு வந்த அமைச்சர் ஆதிதி எஸ் தட்கரே மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.