புனே: மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தை சேர்ந்த உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரான சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டுகிறேன். என் உடல்நலம் தற்போது நன்றாக உள்ளது. கவலைப்படத் தேவையில்லை என்று கூறி உள்ளார். அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது, குறிப்பிடத்தக்கது.