மும்பை

மகாராஷ்டிரா  மற்றும் தமிழகத்தில் அதிகளவு கொரோனாத் தொற்றாளிகள் அதிகளவில்  கண்டறியப்பட்டு வருகின்ற நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வீட்டருகே உள்ள டீ கடைகாரருக்கு கொரோனாத் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி முதல்வரின் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாதோயில் அமைந்துள்ள தனது இல்லத்தில்  மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் உத்தவ் தாக்கரே வசித்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வரின் இல்லத்திற்கு அருகில் உள்ள டீக்கடைக்காரருக்கு COVID-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனவே தொற்று ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என்பதால் உத்தவ் தாக்கரேவின் வீட்டை மும்பை மாநகராட்சி பாதுகாப்பு கருதி முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட  பகுதியாக சீல் வைத்துள்ளது.

இந்திய அளவில் மகாராஷ்டிராவில் கொரோனாத் தொற்று அதிகளவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை 35 பேர் இதற்கு பலியாகி உள்ளனர்…