மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 14000ஐ கடந்துள்ளது.

நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. அதிக கொரோனா தொற்றுகள் என்ற பட்டியலில் இந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 351 போலீசாருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில காவல்துறை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் காவலர்களின் எண்ணிக்கை 14,067 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் கொரோனாவுக்கு 3 காவலர்கள் பலியாகி உள்ளனர். ஆகையால் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது.  இது வரை 11,356 காவலர்கள் கொரோனாவில் குணம் பெற்றுள்னர். இன்னமும் 2,569 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.