மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஷாஹூவாடி காவல் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 4 பேரையும் விசாரணைக்காக போலீசார் கஸ்டடி எடுத்தனர். நாளை மறுநாள் வரை வரை 4 பேரிடமும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை காவல் நிலையத்தில் இருந்து 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

சிறை கதவு கம்பிகளை வளைத்து தப்பியுள்ளனர். போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டது. கைதிகளை பிடிக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.