ஸ்ரீநகர்:

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் சஞ்சுவானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர்.

ராணுவத்தின் பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்- இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் அவந்திப்புராவில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் சஞ்சுவான் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி முப்தி வாகர் கொல்லப்பட்டான்.