சென்னை:

கொருக்குப்பேட்டை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு புறநகர் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்க ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேரம் மாற்றம் செய்துள்ள மின்சார ரெயில் விவரம்:-

கும்மிடிப்பூண்டி to சென்னை கடற்கரை:

இன்றும், நாளையும் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரெயில் மாற்றுப்பாதையில் மூர்மார்க்கெட் வரும்.

பின்னர், வேளச்சேரி-ஆவடிக்கு இன்றும், நாளையும் இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை  முதல் அரக்கோணம்:  நாளையும், 31-ந்தேதியும் நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.

சென்னை கடற்கரைமுதல் அரக்கோணத்துக்கு காலை 4.20, சென்னை கடற்கரை முதல் திருவள்ளூருக்கு காலை 5.30, சென்னை கடற்கரை-ஆவடிக்கு காலை 10.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் நாளையும், நாளை மறுதினமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளையும், நாளை மறுதினமும் வேளச்சேரி to பொன்னேரிக்கு அதிகாலை 4.45 மணிக்கு செல்லும் ரெயில் கடற்கரை to பொன்னேரி மற்றும் பொன்னேரி-வேளச்சேரிக்கு காலை 7 மணிக்கு செல்லும் ரெயில் பொன்னேரி to கடற்கரை இடையேயும், வேளச்சேரி to திருவள்ளூருக்கு காலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரை to திருவள்ளூர் இடையேயும், ஆவடி to வேளச்சேரிக்கு அதிகாலை 4.10, 4.25, 6.05 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ஆவடி to கடற்கரை இடையேயும், அரக்கோணம் to வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் அரக்கோணம் to சென்னை கடற்கரை இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரி to ஆவடி-க்கு காலை 6.05 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு 15 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

ஆவடி to வேளச்சேரிக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.