மெட் கலா’ ஃபேஷன்ஷோவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் கடுமையான விமர்சனத்துக்குள் ஆளான நிலையில், அவரின் ஆடையை உருவாக்க 1,500 மணி நேரங்கள் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்கில் இயங்கும் கல்வி நிறுவனத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ‘மெட் கலா’. இதில் ஒவ்வொருவருமே வித்தியாசமான முறையில் உடைகள் அணிந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம்.

இதில் இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் கலந்து கொண்டார். பிரியங்கா சோப்ரா போட்ட வித்தியாசமான மேக்கப் இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியது. இந்நிலையில், மெட் கலா விழாவில் அவர் அணிந்திருந்த கவுனை உருவாக்க 1,500 மணி நேரம் ஆன தகவல் வெளியாகியுள்ளது .

இந்த ஆடையை உருவாக்கிய டயர் இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.