சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில் கலந்தகொண்ட கமல் பேசுகையில், ‘‘கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 3 நாட்கள் இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

மக்களுக்கான சிம்மாசனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழ் நாட்டை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மக்கள் நீதி மய்யம் மேட்டுக்குடி மக்களுக்கானது கிடையாது. வரும் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளோம்’’ என்றார்.