கலாபவண் மணி – திலீப்

மலையாள நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தைத் தொடர்ந்து மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்று மலையாள இயக்குநர் பைஜூ பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

மலையாள நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் திலீப் மீது இன்னொரு பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பைஜூ

சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்த  நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும்  தொடர்பு உண்டு என்பதுதான் அந்த குற்றச்சாட்டு.

மலையாள திரையுலகில் இது குறித்து முணுமுணுப்புகள் இருந்தன. ஆனால் தற்போது மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “நடிகர்  கலாபவன் மணியின் மர்ம மரணத்துக்கு திலீப்தான் காரணம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.  இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் தெரிவிக்க போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ள என்று அவரது குடும்பத்தினர்  ஏற்கெனவே கூறி வந்த நிலையில் பைஜூவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.