மலையாளத்தில் மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்கு பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் படம் 19 (1) (a). இந்த படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் கடந்த வாரம் தொடங்கியது. விஜய் சேதுபதியும், நடிகை நித்யா மேனனும் படக்குழுவுடன் இணைந்தனர். வி.எஸ்.இந்து இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் நாயகி நித்யா மேனனுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்ற செய்தியும் தெரியவந்துள்ளது.