கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

கோலாலம்பூரைச் சேர்ந்த அவரின் பெயர் முகமது முக்பெல். இவர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து அசத்தி, அதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இந்த சாதனை 5 விநாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும் மற்றும் 3 முட்டைகளும் புதியவையாக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஏற்று இவர் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பொறுமை, பயிற்சி, ஒருமுகத்தன்மை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் தெரிவித்தார். தனது 6 வயது முதல் இதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இவர், முட்டைகளை நிறுத்தும் வீடியோ, இண்டெர்நெட்டில் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.