மாலே:

மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூன் கடந்த 5ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

15 நாட்களுக்கு மட்டுமே பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்று முடிகிறது. இதையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையை ஏற்று மேலும் 30 நாட்களுக்கு அவரச நிலை பிரகடனத்தை நீட்டித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.