திருச்சி:

லேசியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கவும், இங்குள்ள சிக்கியுள்ள மலேசியர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் மீட்பு விமானங்களை இயக்குவதாக  மலிண்டோ (Malindo) விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக உலக நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா, கல்வி மற்றும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்களுக்காக அண்டைநாடுகளுக்கு சென்றவர்கள், சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு 3 நாட்கள் மீட்பு விமானத்தை இயக்குவதாக மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதன்படி,  ஏப்ரல் 1, 2 மற்றும் 4 தேதிகளில் திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு மீட்பு விமானங்களை இயக்கவுள்ளது.

1 ஏப்ரல் OD223 / 224 வருகை 22:35 Dep 23:25
2 ஏப்ரல் OD221 / 222 வருகை 09:45 Dep 10:35
4 ஏப்ரல் OD221 / 222 வருகை 09:45 Dep 10:35