ஷார்ஜா: மும்பை அணியில் மலிங்கா இல்லாதது பெரிய இழப்பு என்று கவலை தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.

சொந்த காரணங்களுக்காக, 13வது ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் மலிங்கா. அவர், இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி, முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார்.

இதுகுறித்து ரோகித் கூறியுள்ளதாவது, “மலிங்கா ஒரு மேட்ச் வின்னர். அவரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. அவர் பல நெருக்கடியான சூழல்களில், சிறப்பாக செயல்பட்டு அணியை மீட்டுள்ளார்.

இந்தமுறை அவரின் அனுபவத்தை நாங்கள் இழக்கிறோம். அதை துரதிருஷ்டமாக நினைக்கிறோம். வேகப்பந்துக்கு பேட்டிசன், குல்கர்னி, மோசின் கான் உள்ளிட்டோர் இருந்தாலும்கூட, அவர்கள் மலிங்காவின் இடத்தை நிரப்புவது கடினமே. கடந்தமுறை போலவே, இம்முறையும் துவக்க வீரராக விளையாடவுள்ளேன்” என்றுள்ளார் ஷர்மா.