மால்டா:
மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
plane-crash1
மத்திய தரைக்கடலின் நடுப் பகுதியில் துனிசியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் உள்ளது மால்டா தீவு. மால்டா சர்வதேச விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது.
இன்று காலை 9.05 மணி அளவில், மால்டாவின் லுகா விமான நிலையத்தில் இருந்து லிபியாவிற்கு புறப்பட்ட சிறிய ரக விமானமானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிலேயே மோதி விபத்து ஏற்பட்டது.
விமானம் மேலே எழும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தால், தரையில் மோதி  விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அந்த  இடமே புகை மூட்டமாக காணப்பட்டது.
plane-crash2
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். அதில் பிரான்ஸ் நாட்டின் சுங்கத் துறை அதிகாரிகள் இந்த விபத்தில் பலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மால்டா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.