கொல்கததா:

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, புதிய அரசு திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் அமையும் என்று மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இதற்கிடையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி, கமல்ஹாசன் கட்சி போன்றவைகளும் இணைந்து 3வது அணி அமைத்து வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான பாரதின ஜனதாவுக்கோ, காங்கிரசுக்கோ பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிரதமர் பதவியயை மம்தா கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது தனித்து போட்டியிடும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி, பாரதிய  ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். அங்கு திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் அலிபூர்தார் மாவட்டத்தில் உள்ள பரோபிஷா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது,

கடந்த  நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அளித்து ஆட்சியை பிடித்த பிரதமர்  மோடி எந்தவொரு திட்டத்தையும்  நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டு களாக அவர் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார்.. தனது மனைவியை கவனித்துக்கொள்ள முடியாத ஒருவரால், இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவு சட்டம், குடியுரிமை திருத்த மசோதா ஆகியவை இந்த நாட்டில் உள்ள சட்ட ரீதியிலான குடிமக்களை அகதிகள் ஆக்கும் சதித்திட்டம் ஆகும். இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படவேண்டும்.

தேர்தலுக்கு பிறகு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.