கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டசபை தேர்தல் வரும் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடக்க உள்ளது. அதில், திரிணமூல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 50 பெண்கள் வேட்பாளர்கள் அடங்கிய 291 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிடுகிறோம். வட மேற்கு வங்கத்தின் 3 தொகுதிகளில், நாங்கள்  வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மேலும், நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.