ஐதராபாத் :

பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணிக்கு   ஆதரவு அளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகரராவ், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை ஏற்படுத்தும் திட்டத்தை வெளியிட்டு  இருக்கிறார்.

சந்திரசேகரராவ் கருத்தை ஐதராபாத் எம்.பி.யும், அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி தலைவருமான ஒவைசி வரவேற்றுள்ளார்.

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், சந்திரசேகரராவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே  மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு பேசினார்.  தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கும்  திட்டத்துக்கு தான்  முழு ஆதரவு  அளிப்பதாக கூறினார்.