உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இதனால் மார்ச் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் ‘Self-ie Quarantined’ என குறிப்பிட்டு மாஸ்க் அணிந்திருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் அவர்.
தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மம்தா மோகன்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது .