க்னோ

ன்னை பிரபல அதிகாரி, நாசா விஞ்ஞானி, ஐஐடி ஆய்வு மாணவர் எனக் கூறி பலரை  ஏமாற்றிய அதுல் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹசரத் கஞ்ச் பகுதியில் உள்ள நியு பெரி சாலையில் டிவின் டவர்ஸ் என்னும் குடியிருப்பு உள்ளது.  இங்கு அதுல் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார்.   இவர் கடந்த 2010 ஆம் வருடம் தன்னை நாசா விஞ்ஞானி எனப் பொய் சொல்லி கணேஸ்வரி என்னும் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.    அவர் பொய் சொல்லி திருமணம் செய்ததை அறிந்த கணேஸ்வரி அவரிடமிருந்து பிரிந்து தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

அத்துடன் கணேஸ்வரி விவாகரத்து வழக்குப் பதிந்துள்ளார்.   அதுல் கடந்த 2007 ஆம் வருடத்தில் இருந்து பல பதவிகளில் இருப்பதாகப் பொய் சொல்லி பலரை  ஏமாற்றியதையும் கணேஸ்வரி கண்டு பிடித்துள்ளார்.  இந்நிலையில் சென்ற மாதம் 18 ஆம் தேதி அன்று கணேஸ்வரியின் வீட்டுக்கு வந்த அதுல் தனது தந்தையைச் சுட்டுக் கொல்ல முயன்றதாக அவர் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை விசாரணை செய்ததில் அவர் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பலரைத் தாம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி, நாசா  விஞ்ஞானி, ஐஐடி ஆய்வு மாணவர் எனப் பல பொய்களைக் கூறி ஏமாற்றியது கண்டறியப்பட்டது.   அதையொட்டி அவருடைய வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டைச் சோதனை இட்டுள்ளனர்.

அவர் அதிகாரியாகப் பணி புரிந்ததற்கான சான்றிதழைக் கேட்ட காவல்துறையினரிடம் அதை வாஷிங்டனில் தாம் வசித்த வீட்டில் 12 வருடங்களுக்கு முன்பு வைத்து விட்டு  வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.  அவரைக் கைது செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.